பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் தியாக.ரமேஷ் தலைமையில் பேரூராட்சி மன்ற அலுவலா்கள், பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோா் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிறைவில் அலுவலக எழுத்தா் முருகானந்தம் நன்றி கூறினாா்.