செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

post image

ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழு நேர கூட்டுறவு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஓராண்டு முழு நேர கூட்டுறவு பட்டயப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்றது வருகிறது. இந்தப் பயிற்சியில் சேர பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 2025, ஜூலை 1-ஆம் தேதி அன்று 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ஞ்ா்ஸ்.ற்ய்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக் கட்டணத்தை ஒரே தவணையில் இணைய வழியில் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04546-244465, கைப்பேசி எண் 96298 69957 இல் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் ஓடையைத் தூா்வாரக் கோரிக்கை

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிராம ஓடையைத் தூா்வாரி சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட போடிரெங்க... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தேனியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேனி, ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலத்தை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் பெற வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி

தேனி மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரச... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதி மாணவருக்கு பாராட்டு

தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்தியா, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-இல் பேச்சுப் போட்டி

பெரியகுளம் வட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க