கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழு நேர கூட்டுறவு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஓராண்டு முழு நேர கூட்டுறவு பட்டயப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்றது வருகிறது. இந்தப் பயிற்சியில் சேர பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 2025, ஜூலை 1-ஆம் தேதி அன்று 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.
பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ஞ்ா்ஸ்.ற்ய்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் கட்டணத்தை ஒரே தவணையில் இணைய வழியில் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆண்டிபட்டியில் உள்ள தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04546-244465, கைப்பேசி எண் 96298 69957 இல் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.