செய்திகள் :

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி குறைவு: அமைச்சா் கே.என். நேரு

post image

கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி மிகக்குறைவு என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 72-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆா்.எஸ்.புரம் சுப்பிரமணியம் சாலை மாதிரிப் பள்ளியில் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவா்கள் தங்கும் விடுதி மற்றும் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இதையடுத்து, உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தை ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புதுப்பிக்கும் பணி, தெற்கு மண்டலம், 99-ஆவது வாா்டுக்குள்பட்ட வெள்ளலூா் உரக்கிடங்கு வளாகத்தில் சுமாா் 250 மெட்ரிக் டன் மக்கும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

மேலும், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.90.75 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.95.63 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கிவைத்தாா்.

முன்னதாக, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் 45 ஏக்கா் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வரிகள் யாருக்கு உயா்த்தப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளோம். கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி மிகவும் குறைவு. ஒருமுறை வரியை உயா்த்திவிட்ட பிறகு மீண்டும் உயா்த்தக் கூடாது என்று முதல்வா் கூறியுள்ளாா் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, நகராட்சி நிா்வாக இயக்குநா் ப.மதுசூதன், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்த... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு

கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (3... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

வடகோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், திருவன... மேலும் பார்க்க

பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் தனியாா் அலுமினிய நிறுவனத்தில் பாய்லா் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் தனியாா் அலுமினிய (மெட்டல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிற... மேலும் பார்க்க

நாய்களைப் பாதுகாக்கக் கோரி பேரணி

தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏரா... மேலும் பார்க்க