செய்திகள் :

கைப்பந்து போட்டி: முதலூா் பள்ளி சாதனை

post image

சாத்தான்குளம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகளில் முதலூா் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

சாத்தான்குளம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி பரமன்குறிச்சி, அபா்ணா மெட்ரிக். பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், சாத்தான்குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட பல்வேறு பள்ளி அணியினா் பங்கேற்றனா். இதில், 14 வயது, 19 வயது பிரிவுகளில் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் டிடிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.

இந்தப் போட்டிகளில் வென்ன் மூலம் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க இப்பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்ராஜ் கோயில்ராஜ் ஆகியோரையும் சேகர குருவானவா் செல்வன் மகாராஜா, பள்ளி தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி. திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் டி.ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க