செய்திகள் :

கொங்கு நாட்டு குல தெய்வம்...

post image

கொங்கு நாட்டு குல அம்மனாக, குல தெய்வமாகத் திகழும் "கொங்கு குல அம்மன்' என்ற பெயரே மருவி "கொங்கலம்மன்' ஆயிற்று என்பர்.

ஈரோடு மாநகரில் மணிக்கூண்டுக்கு அருகில், கொங்கலம்மன் கோயில் வீதியில் "கொங்கலாயி' என்று அழைக்கப்

படும் இந்த அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்

கிறார். ஒரே கல்லால் ஆன தீபஸ்தம்பம் நான்கு கால் மண்டபத்தில் அமைந்துள்ளது. அடிப்புறம் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

அழகிய வேலைப்பாடுடன் கூடிய அலங்கார வாயிலும், மூன்று நிலை ராஜ கோபுரமும் உயர்ந்து நிற்கின்றன. உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், சிம்மம் ஆகியவற்றைக் கடந்து செல்கையில் கல்தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தீர்த்தக் கிணறு உள்ளது.

அரச மரத்தின் கீழ் கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஈசான்ய மூலையில் நாதர்களுக்குத் தனி மண்டபம், பிரத்யங்கராதேவி சந்நிதியும், மேற்கு நோக்கியபடி இரண்டு குதிரைகளும், அருகில் மதுரை வீரன் சந்நிதியும் அமைந்துள்ளது. கருப்பராயர் சந்நிதி, சப்த கன்னிமார், பேச்சியம்மன், அகோர வீரபத்திரர், முனியப்பன் சந்நிதிகளும் உள்ளன.

மகா மண்டபத்தில் கொங்கலம்மன் உலாத்திருமேனி எட்டுக் கரங்களோடு உள்ளது. அதன் அருகிலேயே நான்கு கரங்களுடன் மாரியம்மன் செப்புத் திருமேனி ஒன்றும் உள்ளது.

கருவறையில் கொடிய அரக்கனை அழித்து, கம்பீரமாக மலர்ந்த முகத்துடன் காட்சித் தருகிறாள் கொங்கலாயி. சூலம், உடுக்கை, கத்தி, வாள் ஆகியவை வலது கரங்களிலும், பாம்பு, வேதம், மணி, கபாலம் ஆகியவை இடது கரங்களிலும் ஏந்தியபடி அற்புதக் காட்சி அது.

கொங்கலம்மனை தரிசித்துவிட்டு, வெளியே வருகையில் நுழைவுவாயில் மேலே சுதை வடிவிலான தவசியம்மன் சிலையைக் காணலாம். உலக நன்மைக்காக அன்னை தவமிருக்கும் அற்புதக் காட்சி அது. கோயிலில் தைப் பூசத் திருவிழா சிறப்புற நடைபெறும். ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்பு.

குழந்தை வரம் தரும் பிள்ளைத்தாச்சி அம்மன்!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு வடிவங்கள், புற்றுருவாக உள்ள அம்மன் கோயில்கள் பல உண்டு. ஆனால், நிறைமாதக் கர்ப்பிணி படுப்பதுபோல், மல்லாந்து படுத்தநிலையில் சுயம்பு வடிவில் ஸ்ரீஅங்காளம்மன் அருள்பால... மேலும் பார்க்க

நினைத்தது நிறைவேறும்...

தனது தங்கை தேவகியை வசுதேவருக்கு திருமணம் செய்துவித்து, காலநேமி தேரை ஒட்டிச் சென்றார் கம்சன். அப்போது, "உன் தங்கை வயிற்றில் உதிக்கும் எட்டாவது சிசு உன்னைக் கொல்லும்' என அசரீரி ஒலித்தது. உடனே வசுதேவரையு... மேலும் பார்க்க

நவ கயிலாய கோயில்கள்...

உலகில் சிவலிங்கத்துக்கு பெயர் பெற்ற இடம் இமயமலையில் உள்ள சிவ கயிலாயம். தென் தமிழ்நாட்டில் தாமிரவருணி ஆற்றங்கரையில் நவ கயிலாயம் என ஒன்பது கோயில்கள் உள்ளன.புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்... மேலும் பார்க்க

தாயே கருமாரி...

ஆதிபரம்பொருளான கருமாரியம்மன் ஒவ்வொரு ஊராக வலம் வந்து, தண்டலம் மயானத்துக்குச் சென்று முதன்முதலில் ஜோதி வடிவமாய் காட்சியளித்தாள். அவ்வூர் "பழந்தண்டலம்' எனப்பட்டது. அங்கிருந்து வேலங்காட்டுக்கு சென்று தன்... மேலும் பார்க்க

சிறகு இல்லாத சிறகிலிநாதர்!

ராமாயணக் காலத்தில், ராமனிடம் சடாயு என்ற கழுகு, சீதை இராவணனால் கொண்டு செல்லப்பட்ட விவரம் கூறுகிறது. "கண்டேன் தேவியை' - ராவணனுடன் சீதையை மீட்கப் போராடி அரக்கன் தன் மந்திர வாளால் சடாயுவின் சிறகை வெட்டி க... மேலும் பார்க்க

இழந்த பதவியை தருபவர்...

முற்காலத்தில் இலஞ்சியை ஆண்டு வந்த பகீரதன், தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தால் கர்வம் மிகுந்திருந்தார். ஒருசமயம் அவனது சபைக்கு நாரதர் வந்தபோது, அரசர் உபசரிக்கவில்லை. கோபமுற்ற முனிவர் அங்கிருந்து சென்ற... மேலும் பார்க்க