கொடைக்கானலில் இன்று மின் தடை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஆக.8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.