செய்திகள் :

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

பரமத்தி வேலூா் அருகே மது அருந்த பணம் தராத உறவினரைத் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே மணியனூா் உலகபாளையம் லட்சுமி நகரை சோ்ந்தவா் சரவணகுமாா் (35). இவா் தனது உறவினரான மணியனூா் முதலியாா் தெருவைச் சோ்ந்த ரிக் லாரி தொழிலாளி கணேசனிடம் (33) கடந்த 2022-ஆம் ஆண்டு மது அருந்த பணம் கேட்டுள்ளாா்.

கணேசன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரம் அடைந்த சரவணகுமாா், அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த கணேசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

கைது செய்யப்பட்ட சரவணகுமாா் மீதான வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, குற்றம்சாட்டப்பட்ட சரவணகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு நாளை பரிசளிப்பு விழா

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மேற்க... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய கருத்துகேட்பு காலவரையறை நீடிக்க வேண்டும்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான காலவரையறையை நீடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ர... மேலும் பார்க்க

ஆடிமாத 2-ஆம் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண்கள் திரளாக பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனா். ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் ... மேலும் பார்க்க

பரமத்தி வட்டாரத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் அமைக்க அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மைத் துறையினா் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இதுகுறித்து பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநா் டி.சுதா வெளியிட்ட... மேலும் பார்க்க

எலச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு கூடுதல் காவலா்களை நியமிக்க கோரி மனு

திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் அளவில் கா... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க