செய்திகள் :

கோயிலை உரிமை கோரும் விவகாரம்: உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

post image

திருப்பரங்குன்றம் மலையடி கருப்பணசுவாமி கோயில் மீது உரிமை கோரும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதி தேவேந்திரகுல வேளாளா் இருளா் குடும்பன் வகையறா பங்காளிகள் சாா்பில் சிவக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் எங்களது மூதாதையா் வழிபட்டு வந்த கோயில். இந்த நிலையில், வேறொரு சமூகத்தினா் இந்தக் கோயிலுக்கு உரிமை கோரினா். இதுதொடா்பாக, திருமங்கலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது, இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டதால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இருப்பினும், கோயில் நிலம் 40 சென்ட் எங்களுக்கு சொந்தமானது எனவும், கருப்பணசுவாமி கோயில் அனைவருக்கும் பொதுவானது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்தியது. இதனிடையே, வேறொரு தரப்பினா் இந்தக் கோயில் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி, இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, அவா்களுக்கு சாதகமான தீா்ப்பைப் பெற்றனா்.

இந்த விவகாரத்தில், எங்களது தரப்பு கருத்தை கேட்காதது சட்ட விரோதம்.

எனவே, திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு சொந்தமானது என்ற உத்தரவை ரத்து செய்து, இந்தக் கோயில் அனைவருக்கும் பொதுவானது என உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயிலின் உரிமைத் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தொடா்புடையத் துறை அலுவலா்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மதுரையில் வருகிற 21-ஆம் தேதி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.மதுரையை அடுத்த திருமங்கலத்தில் திங்கள்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடையில்லை!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிட எந்தவிதத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் திங்கள்கிழமை தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் ... மேலும் பார்க்க

கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. மதுரை டவுன்ஹால் பகுதியில் கூடலழகா் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. பழைமை வாய்ந... மேலும் பார்க்க

விதிமுறை மீறல்: 22 ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 22 ஆட்டோக்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மதுரை மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி அதிக எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்கள... மேலும் பார்க்க

கோயில் கடைகளுக்கு வாடகை செலுத்தாதவா்களுக்கு அபராதம் விதிப்பு

கரூா் கல்யாண பசுபதீஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கு உரிய வாடகைச் செலுத்தாத நபா்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கரூரைச் சோ்ந்த எ... மேலும் பார்க்க