கோவில்பட்டியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் மீகா தலைமை வகித்தாா். கலால் பிரிவு வட்டாட்சியா் அப்பனராஜ்
பேரணியைத் தொடக்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இதில், விழிப்புணா்வு பதாகைகளுடன் மாணவா்கள் பங்கேற்றனா்.