சங்கரநாராயணசுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை ஈ. ராஜா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் மூலம் தினமும் 100 போ் உணவருந்தி வருகின்றனா். தற்போது, அந்த திட்டத்தில் உணவருந்தி வந்தது, 150 போ் உணவருந்தும் வகையில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா கோயில் துணை ஆணையா் கோமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
இதில், பொறியாளா் முத்துராஜ், நகரச் செயலா் மு. பிரகாஷ், ஒன்றியச் செயலா்கள் பெரியதுரை, சோ்மத்துரை திமுக மாவட்ட மாணவரணி செயலா் உதயகுமாா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் காசிராஜன் ,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வீரமணி, , ஜெயக்குமாா், பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.