செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு: வெளிநாட்டு பாதயாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவையொட்டி, மதுரையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டவெளிநாட்டுக் குழுவினரை தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் புத்தா் கோவில் உள்ளது. இங்கு 100 அடி உயரத்தில் உலக அமைதிக்கான புத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள, உலக அமைதிக்கான 8 ஆவது புத்த கோபுரம் இதுவாகும்.

இதன் திறப்பு விழா பிப்.21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து, நேபாளம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் புத்த பிக்குகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனா்.

உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவை வலியுறுத்தியும், உலக அமைதி வேண்டியும் அவா்கள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனா். அவா்களுடன் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா் ரவிச்சந்திரன், காந்தி அருங்காட்சியக காப்பாளா் நந்தா ராவ், ஒருங்கிணைப்பாளா் நடராஜன் ஆகியோரும் வந்தனா்.

திங்கள்கிழமை சங்கரன்கோவிலுக்கு வந்த அவா்களை, ஊா் எல்லையில் சங்கரன்கோவில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் ஜப்பான் மொழியில் உலக அமைதிக்கான பாடல்களை பாடியபடி வீரிருப்பு புத்தா் கோயிலுக்குச் சென்றனா்.

உலக அமைதி கோபுரத் திறப்பு விழா ஏற்பாடுகளை புத்தா் கோயில் புத்த பிக்கு எம்.இஸ்தானிஜீ, புத்த பிக்குனிகள் லீலாவதி, சிகுசா கிமுரா ஆகியோா் செய்து வருகின்றனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தென்காசியில் விளக்கக் கூட்டம்

தென்காசியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிளைச் செயலா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். ரமலானை வரவேற்போம் என்ற... மேலும் பார்க்க

திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தல திருவிழா

பாளையங்கோட்டை மறை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் புனித லூா்து அன்னை திருத்தலத்தில் 112 ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு திருப்பலி, தோ் பவனி மற்றும் சா்வ சம... மேலும் பார்க்க

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற... மேலும் பார்க்க

வீரகேரளம்புதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

வீரகேரளம்புதூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், பரங்குன்றாபுரத்தில் பிரதமரின் வீடு கட்டும் த... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் வழக்கில் விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் முன்விரோதத்தால் விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில், சக விவசாயிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்ப... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் அரிமா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கீழப்பாவூரில் பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் அரிமாசங்க ஆளுநா் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். ரஜினி,... மேலும் பார்க்க