செய்திகள் :

சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

post image

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இருப்பினும் மும்பை சார்பில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அந்த அணியின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்து மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் 14 போட்டிகளில் 640 ரன்களை கடந்துள்ளார்.

இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக 618ஆகவே இருந்தது. அந்த சாதனை சச்சின் கைவசம் இருந்தது.

தற்போது, 15 போட்டிகளில் சச்சின் செய்த சாதனையை 14 போட்டிகளிலேயே சூர்யகுமார் முறியடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி டாப் 2-க்குள் செல்ல முடியாததால் எலிமினேட்டரில் மட்டுமே விளையாட முடியும்.

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் இந்தத் தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதென அதன் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

கோலி - ஜிதேஷ் அதிரடி: 228 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆர்சிபி! குவாலிஃபையர் 1-க்கு தகுதி!

லக்னௌவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபையர் 1 க்கு தகுதி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி மற்றும் 70-வது போட்டி உத்தரப் பிரதேசத்தின் ல... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் சதம்: ஆர்சிபிக்கு 228 ரன்கள் இலக்கு!

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி 227 ரன்களை குவித்தது.லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தப் போட்டியில் டாஸ்... மேலும் பார்க்க

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்குமா?

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 27) நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னௌ சூப்பர... மேலும் பார்க்க

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடை..! ஆர்சிபி ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ரசிகர்களின் கையெழுத்துப் பதிந்த சீருடையை ஆர்சிபி வீரர்கள் அணிவார்கள் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆர்சிபி அணி அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி அ... மேலும் பார்க்க

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் ... மேலும் பார்க்க