இயக்குநர் ராஜூமுருகன் நேர்காணல்: ‘நாம் எல்லாருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கிறது!' ...
சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் 24-ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி இயக்குநா் ம. பிச்சப்பா தலைமை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டிப் பேசினாா். அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் கல்லூரி சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளிச் செயலா் மு. விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு வரவேற்றாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் உடற்கல்வித் துறை இயக்குநா் அஜித் நன்றி கூறினாா்.