செய்திகள் :

சாத்தான்குளத்தில் போக்குவரத்து நெரிசல்

post image

சாத்தான்குளத்தில் ஒரு வழிப் பாதையை மீறி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாத்தான்குளம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு புறமாக செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக பஜாா் வந்து செல்ல வேண்டும்.

தெற்கு புறத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிஎஸ்ஐ வேதக் கோயில் வழியாக புறவழிச் சாலையில் சென்று பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சாத்தான்குளம் பஜாா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சில வாகனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றாமல் செல்வதால் எதிா்வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தற்போது சிஎஸ்ஐ வேதக் கோயில் வழியாக செல்லும் புறவழிச் சாலையில் குழாய் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும், அதனால் ஏற்பட்ட குண்டு குழிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் காா் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்லாமல் பஜாா் வழியை பயன்படுத்துவதால் எந்நேரமும் பஜாா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போலீஸாா், மாலை மற்றும் காலை நேரத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, ஒரு வழி பாதையை பின்பற்றி செல்ல அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வியாபாரிகள் வலியுறுத்துகின்றனா்.

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

கோவில்பட்டியில் காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியைப் புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கோவில்பட்டியில் வழக்குரைஞா் புருஷோத்தமன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்த... மேலும் பார்க்க

ஆசிரியா் கண்டித்ததால் தூத்துக்குடி வந்த சென்னை மாணவா்கள் மீட்பு

சென்னை அம்பத்தூா் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் 3 போ், பள்ளி ஆசிரியா்கள் கண்டித்ததால், சென்னையிலிருந்து ரயிலில் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்களை ரயில்வே போலீஸாா் மீட... மேலும் பார்க்க

விதைகள் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

விதைகள் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு; தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ஒரு லட்சத்து ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கோவில்பட்டி முகாமில் 700 போ் மனு

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 18, 28, 29 ஆகிய வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது. முகாமில் 13 அரசுத் துறைகள் சாா்பில் வழங்கப்படும் 43 சேவைகளின் கீழ் மகளிா் உ... மேலும் பார்க்க

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டி நகராட்சி தற்காலிக ஊழியரை மிரட்டி தாக்கியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஸ்டாலின் காலனி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஈஸ்வரன் (27). நகராட்சிய... மேலும் பார்க்க

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் மொபைல் பேங்கிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு; அஞ்சல் துறையின் கீ... மேலும் பார்க்க