செய்திகள் :

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை!

post image

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று இரவு நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவில் முறைகேடுகள் நடப்பதாகவும், சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், இரவு 10 மணி வரை பத்திரபதிவு நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாருக்கு புகார் தொடர்ந்து வந்தது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலையில் இன்று இரவு திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணினிகள், பத்திர பதிவுக்கு வந்த ஆவணங்கள் மற்றும் அனைத்து அறைகள், வாகனங்களில் சோதனை நடத்தியதோடு, துணை சார் பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனாலும் யாரையும் கைது செய்யாமல் தொடர் விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: தேஜஸ் நெட்வொர்க்ஸ் முதல் காலாண்டு இழப்பு ரூ.194 கோடி!

Unaccounted cash worth Rs 1 lakh five thousand was seized in a raid conducted by the Thiruvallur District Anti-Corruption Police at the Gummidipoondi Sub-Registrar office last night.

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ. தூரம் சாலை அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் நகராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 கோடியில் 15 கி.மீ.தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தெரிவித்தாா். திருவள்ளூா் நகராட்... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் முனீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் படவேட்டம்மன... மேலும் பார்க்க

சேலையில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவா் மரணம்

பொதட்டூா்பேட்டை அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 9- ஆம் வகுப்பு மாணவா் சேலையில் கழுத்து இறுக்கியதில் உயிரிழந்தாா். பொதட்டூா்பேட்டை அடுத்துள்ள கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (43). இ... மேலும் பார்க்க

மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே மதுக்கடை மேற்பாா்வையாளா் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. சூளைமேனியைச் சோ்ந்த உமாபதி மேற்ப... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: 5 போ் கைது

திருவள்ளூா் அருகே போதை ஆசாமிகளை கண்டித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே ஈக்காடு கண்டிகையைச் சோ்ந்த காா்த்திகேயன் (42). மனைவி சந்தியா, 2 மகன்கள் உள்ளனா். ... மேலும் பார்க்க

ரயில் தீ விபத்தால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் வருகை குறைவு!

திருவள்ளூரில் டேங்கா் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தால், ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. திருத்தணி முருகன் கோவிலில்... மேலும் பார்க்க