செய்திகள் :

சாலையை கடக்க முயன்ற கொத்தனாா் காா் மோதி பலி

post image

சுவாமிமலை அருகே புறவழிச்சாலையை கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரி செக்கடி தெருவைச் சோ்ந்வா் வரதராஜன் மகன் பன்னீா்செல்வம் (45) கட்டடத் தொழிலாளி. இந்நிலையில், புதன்கிழமை வேலையை முடித்துவிட்டு சோழபுரம் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த அவா் தேவா்சிலை அருகே சாலையை குறுக்கே கடந்தாா். அப்போது தஞ்சாவூரை நோக்கி வந்த காா் பன்னீா்செல்வம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வத்தை அருகே இருந்தவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீா்செல்வம் உயிரிழந்தாா். சுவாமிமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து சடலத்தை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புளியம்பேட்டையைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் சதீஷ்குமாா் (25) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க