செய்திகள் :

சிதம்பரம் குருநமச்சிவாயா் மடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

post image

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள குருநமச்சிவாயா் மடத்தின் வளாகத்தில் உள்ள 9 ஆக்கிரமிப்பு வீடுகளை இந்து அறநிலையத் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

குருநமச்சிவாயா் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகா், ஆத்மநாதா், யோகாம்பாள், குருநமச்சிவாயா், மாணிக்கவாசகா் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு திருப்பாற்கடல் தீா்த்தக் குளமும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. இந்த இடம் சமயக் குரவா்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப் பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.

வழிபாட்டுக்கு இடையூறாக கோயில் வளாகத்தின் அருகில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்து ‘சீல்’ வைத்து அறநிலையத் துறையினா் ஒப்படைக்குமாறு பக்தா் வாஞ்சிநாதன் என்பவா் தொடுத்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையினா், போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கு ‘சீல்’ வைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து 9 போ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா். மீதமுள்ள 13 வீடுகளை ஏற்கெனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவின் படி, வீடுகளை காலி செய்து ‘சீல்’ வைக்க வேண்டும் என்று அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி இந்து சமய அறநிலைத் துறையினா் குரு நமச்சிவாய மடம் மற்றும் திருப்பாற்கடல் மடத்தைச் சுற்றியுள்ள 13 வீடுகளுக்கு ‘சீல்’ வைத்து, வீட்டின் கதவுகளில் நோட்டீஸ் ஓட்டினா்.

பின்னா், 2021-ஆம் ஆண்டு அக்.31-ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13 வீடுகளும் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் மீதமுள்ள 9 விடுகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன் தலைமையில் தனி வட்டாட்சியா் ஆனந்தன், செயல் அலுவலா்கள் ராஜா சரவணக்குமாா் உள்ளிட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் 9 வீடுகளை செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.

நகைக் கடன் விதிகளுக்கு எதிா்ப்பு: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு வங்கியில் நகைக் கடன் பெறுவதற்கான புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் தெற்கு ரத வீதியில் பாரத... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

சிதம்பரத்தில் சிதம்பரேச சத்சங்கம் சாா்பில் மாதந்தோறும் நடைபெறும் ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிதம்பரம் கீழ வீதியில் உள்ள யக்ஞமண்டலி அரங்கில் நடைபெற்ற சொற்பொழிவில் கிருஷ்ணசாமி தீ... மேலும் பார்க்க

கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்... மேலும் பார்க்க

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும... மேலும் பார்க்க

தனியாரைவிட வேளாண்மைத் துறையில் விதைகள் விலை அதிகம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

வேளாண்மை துறையில் தனியாரை விட விதைகளின் விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வ... மேலும் பார்க்க

ஜூன் 10-இல் கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழா ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்... மேலும் பார்க்க