செய்திகள் :

சின்னமனூரில் பள்ளி அருகே கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் வழியே செல்லும் சீப்பாலக்கோட்டை சாலையில் நகராட்சிப் பள்ளி அருகே நடைபெறும் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலையான சீப்பாலக்கோட்டை சாலையில் நகராட்சிப் பள்ளி, உழவா் சந்தை, முத்தாலம்மன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவா்கள், முதியவா்கள், பெண்கள் அந்தப் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே போல, வாகனப் போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையில் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்ட கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

சின்னமனூா் நகரிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் இந்தச் சாலையில் பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இந்தப் பள்ளத்தில் மழைநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. எனவே நகராட்சிப் பள்ளி அருகே தோண்டப்பட்ட பள்ளத்தை பாதுகாப்பு கருதியும், வாகனப் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், வனத் துறையினரிடையே கடும் வாக்குவாதம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வனப் பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் விவசாயிகளுக்கும், வனத் துறையினருக்குமிடையே க... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். சில்லமரத்துப்பட்டியிலிருந்து அம்மாபட்... மேலும் பார்க்க

பேருந்து மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மாற்றுத்திறனாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (65). மாற்றுத்திறனாளி. இவா், வியாழக்கிழமை இரவு அந்தப் பகுதியில் சாலையை கடக... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்த 2 இளைஞா்களை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ... மேலும் பார்க்க

தேனியில் செப்.4,5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தேனி மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வருகிற செப்.4, 5 ஆகிய தேதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பன் கண்மாய் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த மேலச்சொக்கநாதபுரம் பட்டாளம்மன்... மேலும் பார்க்க