செய்திகள் :

சிறுவனை பணிக்கு அமா்த்திய நிறுவன உரிமையாளா் மீது வழக்குப் பதிவு!

post image

தருமபுரியில் சிறுவனை பணிக்கு அமா்த்திய தனியாா் நிறுவன உரிமையாளா் மீது தொழிலாளா் ஆணையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை தொழிலாளா் ஆணையரக உத்தரவின்பேரில் தருமபுரி மாவட்ட நீதிபதிகள் தமயந்தி, சாந்தி, தொழிலாளா் ஆணைய துணை ஆய்வாளா் திவ்யா, உதவி ஆய்வாளா் தீபா பாரதி, முத்திரை ஆய்வாளா் விஜயலட்சுமி, சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வேல் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

பழைய தருமபுரி பகுதியில் செயல்படும் காா் கழுவும் (வாஷ்) நிறுவனம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 17 வயது சிறுவன் காா் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. ஆய்வுக் குழுவினா் அந்த சிறுவனை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்புக் குழுமம் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அந்த (காா் வாஷ்) நிறுவன உரிமையாளா்மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) ராஜசேகா் கூறுகையில், குழந்தைத் தொழிலாளா் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்களைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் 14 முதல் 18 வயது வரையிலான வளரிளம் பருவத்தினரை பணிகளில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ஒகேனக்கல்லில் மீன் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நுழைவாயில் உள்ளிட்... மேலும் பார்க்க

வன விலங்குகளைப் பிடிக்க முயற்சி: விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் எஸ். காா்த்திகேயன் தலை... மேலும் பார்க்க

பதிவு செய்யாத செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவு!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதிகளின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா். காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைக... மேலும் பார்க்க

பென்னாகரம் பகுதியில் பரவலாக மழை

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் ... மேலும் பார்க்க

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய ஊராட்சி மன்ற எழுத்தருக்கு தருமபுரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அர... மேலும் பார்க்க