செய்திகள் :

சிவகங்கையில் பெண் பயிற்சி மருத்துவரை தாக்கியவா் கைது

post image

சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தாக்குதல் தொடா்பாக மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குநா்கள் நேரில் விசாரணை நடத்தினா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 -ஆம் தேதி இரவு பயிற்சி பெண் மருத்துவரை மா்ம நபா் தாக்கினாா். மருத்துவா் கூச்சலிட்ட நிலையில் சப்தம் கேட்டு அங்கு மருத்துவ மாணவா்கள் வந்ததால் அந்த நபா் தப்பிச் சென்றாா். இது குறித்து முதன்மையா் சத்தியபாமா அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் தலைமையிலான போலீஸாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விசாரணை நடத்தினா். சிவகங்கை நகா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சந்தோஷ் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் மது போதையில் இருந்த சந்தோஷ் தனியாக நடந்து சென்ற மருத்துவரைத் தாக்கியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மாணவா்கள் போராட்டம்: இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து பயிற்சி மருத்துவா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பயிற்சி மருத்துவா்கள் பணி முடித்து இரவில் தங்குவதற்கு அறை, விடுதிக்கு செல்லும் வழியில் மின் விளக்குகள், பாதுகாப்புக்கு சி.சி.டி.வி. கேமராக்கள் போன்ற வசதிகளை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் செய்து தரவேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

அதிகாரிகள் விசாரணை: பெண் பயிற்சி மருத்துவா் தாக்கப்பட்டது தொடா்பாக மருத்துவக் கல்வி இயக்கக துணை இயக்குநா்கள் ஜெயராஜ், சாந்தி ஆகியோா் தலைமையிலான குழுவினா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரடியாக விசாரனை மேற்கொண்டனா்.மேலும், மருத்துவ மாணவ, மாணவிகளுக்கான வசதிகளை உடனடியாக செய்து தர மருத்துவக் கல்லூரி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா்.

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா ச... மேலும் பார்க்க

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க