செய்திகள் :

சீன கனமழையால் நேபாளத்தில் வெள்ளம்! 18 பேர் மாயம்!

post image

சீனாவில் பெய்து வரும் கனமழையால், நேபாள நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (ஜூலை 7) இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால், அண்டை நாடான நேபாளத்தின் பொடேக்கோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரவௌசா மாவட்டத்தில் அமைந்திருந்த நேபாளம் மற்றும் சீனா இடையிலான முக்கிய எல்லைப் பாலமானது அதிகாலை 3.15 மணியளவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வெள்ளம் இருநாடுகளிலும் பலத்த சேதாரங்களை உருவாக்கியதுடன், 6 சீனர்கள் உள்பட 18 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.

இதுகுறித்து, நேபாளத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், வெள்ளத்தால் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் பயங்கர சேதமடைந்ததாகவும், 2 காவல் துறையினர் உள்பட 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாளத்தின் ராணுவம், ஆயுத காவல் படையினர் மற்றும் அந்நாட்டு காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Heavy rains in China have caused flooding in Nepal, washing away the border bridge between the two countries.

இதையும் படிக்க: தெலங்கானா ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

ஆக. 1முதல் கூடுதல் வரி விதிப்பு அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது! -டிரம்ப்

வெளிநாட்டு பொருல்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை(ஜூலை 8... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்

டொனால்ட் டிரம்ப்பின் பெயர் நோபல் பரிசுக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துர... மேலும் பார்க்க

மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நா... மேலும் பார்க்க

விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 160 பேர் அஸ்தி! கடலில் கலந்த பரிதாபம்!

விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நி... மேலும் பார்க்க

குழந்தை பெற்றுக் கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி! ரஷியாவில்

ரஷியாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, 900 ஈரோக்கள், கருவுறும் பள்ள... மேலும் பார்க்க

கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!

கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும்,... மேலும் பார்க்க