செய்திகள் :

சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதி: அமெரிக்கா புதிய ஒப்பந்தம்!

post image

வாஷிங்டன்: சீனாவிலிருந்து அரிய தனிமங்கள் இறக்குமதிக்கான புதியதொரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புதன்கிழமை(ஜூன் 11)

இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீனாவிலிருந்து காந்தங்கள்(மேக்நெட்) மற்றும் புவியிலிருந்து கிடைக்கும் அரிய பல தனிமங்களை அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்ளும். மேலும், இதற்கான இறக்குமதி வரியாக சீனாவிடமிருந்து 55 சதவீதம் வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஈடாக, அமெரிக்க தரப்பிலிருந்து சீனா விரும்புவதை நாங்கள் வழங்குவோம் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக, சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர அனுமதியளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் டிரம்ப் வெளியிட்டிருந்த உத்தரவின்கீழ், அமெரிக்க கல்வி நிறுவன வளாகங்களிலிருந்து சீன நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தயாரான பின், அமெரிக்கா - சீனா இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க