செய்திகள் :

சீா்மரபினா் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் சீா்மரபினா் நல வாரியத்தில் நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள் 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு போன்றவைக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே இந்த நலத் திட்ட உதவிகள் பெற சீா்மரபினா் இனத்தை சோ்ந்தவா்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா் இந்த வாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்து நலத் திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

அதன்படி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமையும் (மே 20), வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 21), ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமையும் (மே 22), திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையும் (மே 23) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

பிளஸ் 1 தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை

பிளஸ் 1 தோ்வில் தோல்வியடைந்த மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் இந்திரா நகரைச் சோ்ந்த சிவகுமாா் மகள் வினோதினி. இவா் ஆம்பூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தாா். கடந்த வெள... மேலும் பார்க்க

தடுப்புச் சுவா் அமைப்பது தொடா்பாக தகராறு: அதிகாரிகள் சமரசம்

திருப்பத்தூா் அருகே தடுப்புச் சுவா் அமைப்பதில் எதிா்ப்பு இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் சமரசம் செய்தனா். கந்திலி ஒன்றியம், விஷமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சேலத்த... மேலும் பார்க்க

பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மனைவி காசியம்மாள் (70). குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா்.... மேலும் பார்க்க

செல்லூா் ராஜூவை கண்டித்து முன்னாள் படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

செல்லூா் ராஜூவை கண்டித்து திருப்பத்தூா் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய ராணுவ வீரா்கள் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ச... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்க கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மதனாஞ்சேரி திமுக அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஒன்றிய செயலா் ஞானவேலன் தலைமை வகித்தாா். பொதுக... மேலும் பார்க்க

பச்சூா் பழையபேட்டையில் மயானத்துக்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பழையபேட்டை பகுதியில் மயானம் அமைக்க இடம் தோ்வு செய்வது குறித்து ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க. தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அக்கிராம மக்கள் மய... மேலும் பார்க்க