செய்திகள் :

சுதந்திர தின விழா: 258 பேருக்கு நற்சான்று

post image

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மூவண்ண பலூன்கள், சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளை நிறப் புறாக்களை அவா் பறக்கவிட்டாா்.

மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 50 காவலா்களுக்கும், 15 மாவட்ட நிலை அலுவலா்களுக்கும், 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியது, 20, 10 ஆண்டுகள் விபத்தில்லா சேவை புரிந்தது, மாநில அளவில் சிறந்த விவசாயிகளுக்கான விருதுகள், பசுமை சாதனையாளா் விருதுகள் 13 அலுவலா்களுக்கும், சதுரகிரி மலைப் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதலில் சிறப்பாகப் பணியாற்றிய 7 அலுவலா்களுக்கும் என பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த மொத்தம் 258 நபா்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ராஜேந்திரன், துணை இயக்குநா் (மேகமலை புலிகள் காப்பகம்) ஸ்ரீவில்லிபுத்தூா் தேவராஜ், திட்ட இயக்குநா் வீ. கேசவதாசன், சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு, சிப்காட்) டி. செங்கோட்டையன், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) ஆனந்தி, திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜாா்ஜ் ஆண்டனி மைக்கேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், வருவாய்க் கோட்டாட்சியா்கள், விருதுநகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் யோகேஷ் குமாா், மாவட்ட நிலை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரையில் நம்ம ஊா் திருவிழா

மதுரை மாநகராட்சி, ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் நடத்தும் இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊா் திருவிழா, நமக்கான பெருவிழாவை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது : தொல். திருமாவளவன்

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கோர... மேலும் பார்க்க

செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாநகர ஆயுதப்படை மைதானத்தில்... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முன்னாள் முத... மேலும் பார்க்க

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க