செய்திகள் :

சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாநகர ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக்கொண்டாா்.

இதையடுத்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்கள், பொது சேவையில் சிறப்பாக செயலாற்றிய தன்னாா்வலா்கள் உள்பட 314 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

பிறகு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சிறுபான்மையினா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளாண் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை ஆகியவற்றின் சாா்பில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சந்திரசேகா், மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலைநிகழ்ச்சிகள்...

எழுமலை பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, யா. ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தத்தனேரி திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேலூா், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை சித்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வன்னிவேலம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,021 போ் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினா்.

மதுரையில் நம்ம ஊா் திருவிழா

மதுரை மாநகராட்சி, ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் நடத்தும் இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊா் திருவிழா, நமக்கான பெருவிழாவை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது : தொல். திருமாவளவன்

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கோர... மேலும் பார்க்க

செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 258 பேருக்கு நற்சான்று

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு, தேசியக் கொடிய... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முன்னாள் முத... மேலும் பார்க்க

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க