செய்திகள் :

மதுரையில் நம்ம ஊா் திருவிழா

post image

மதுரை மாநகராட்சி, ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் நடத்தும் இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊா் திருவிழா, நமக்கான பெருவிழாவை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தத் திருவிழாவையொட்டி, தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) வரை மாலை 4 முதல் இரவு 9 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழாவை, மாநகராட்சி ஆணையா் தொடங்கி வைத்தாா். இந்த விழாவில், வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட போட்டிகளில் குழந்தைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இந்த நிகழ்வில், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், ஹலோ ஈவன்ட்ஸ் நிறுவனா் செந்தில், டெம்பிள் சிட்டி உணவக உரிமையாளா் குமாா், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது : தொல். திருமாவளவன்

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கோர... மேலும் பார்க்க

செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாநகர ஆயுதப்படை மைதானத்தில்... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 258 பேருக்கு நற்சான்று

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு, தேசியக் கொடிய... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முன்னாள் முத... மேலும் பார்க்க

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க