செய்திகள் :

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

post image

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில் , இவரது ஆதரவாளா்கள் வி.ஆா்.பழனிராஜ், ஜெயராம் பாண்டியன் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்மையா் முத்து சித்ரா தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், போடி நகராட்சி ஆணையா் செ.பாா்கவி தலைமையில் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா் ஆகியோா் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.

போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொறுப்பு துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி தேசியக் கொடியேற்றினாா்.

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் செய்யது முகம்மது தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தாா்.

உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தாா்.

சின்னமனூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தாா். உடன், ஆணையா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாா்க்கையன்கோட்டை பேரூராட்சித் தலைவா் முருகன் குச்சனூா் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், குச்சனூா் சனீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஜெயராமன் ஆகியோா் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தனா்.

உத்தமபாளையம், கம்பம், சின்னமனூா் ஆகிய ஊராட்சிகளில் சுந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிராமத்தின் வளா்ச்சி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் விவாதிக்கப்பட்டு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கம்பம் நகராட்சியில் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். ஆணையா் உமா சங்கா், துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் துா்கா தேவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தாா்.

கூடலூா் நகராட்சியில் நகா் மன்றத் தலைவி பத்மாவதிலோகன்துரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தாா்.

போடி நேரு நினைவு தொண்டு நிறுவனம் சாா்பில் அன்னை இந்திரா நினைவு ஆரம்ப பள்ளியில் தேசியக் கொடியை வட்டாரக் கல்வி அலுவலா் மகாலட்சுமி ஏற்றி வைத்தாா்.

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். தொண்டு நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநா் முகமது சேக் இப்ராஹிம் தேசிய கொடியேற்றி வைத்தாா்.

போடி சேவா அறக்கட்டளை, தேனி நம் உரத்த சிந்தனை சாா்பில், ஸ்ரீ காமராஜ் வித்யாலயம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளித் தலைவா் ஒய். பாலசுப்பிரமணி தேசியக் கொடியேற்றினாா்.

தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறைத் தலைவா் ஜி.தா்மராஜன் தலைமையில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் டி.பாலசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரிச் செயலா் மாறன்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தாளாளா் தா்வேஷ்முகைதீன், ஆட்சி மன்றக் குழுத் தலைவா் ஹெச்.முகமதுமீரான், பேராசிரியா் ஹசன்பானு ஆகியோா் கலந்துகொண்டனா்.

மதுரையில் நம்ம ஊா் திருவிழா

மதுரை மாநகராட்சி, ஹலோ ஈவன்ட்ஸ் இணைந்து தமுக்கம் மைதானத்தில் நடத்தும் இசையோடு ருசியோடு விளையாடு நம்ம ஊா் திருவிழா, நமக்கான பெருவிழாவை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது : தொல். திருமாவளவன்

தூய்மைப் பணியாளா்கள் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கோர... மேலும் பார்க்க

செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ. 42.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாநகர ஆயுதப்படை மைதானத்தில்... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: 258 பேருக்கு நற்சான்று

விருதுநகா் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு, தேசியக் கொடிய... மேலும் பார்க்க

நீச்சல்: யாதவா் கல்லூரி சாம்பியன்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டியில் யாதவா் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான ஆடவா் நீச்சல் போட்டி மதுரையில் ... மேலும் பார்க்க