சுவா் இடிந்து மாணவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து மாணவா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த சரிதா. இவரது மகன் வெற்றி (14) . இவா் ஆம்பூரில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்கள் வசிக்கும் வீடு பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இந்த நிலையில், வெற்றி பள்ளி முடிந்து வீட்டுக்குள் நுழைந்தபோது, பழுதடைந்த சுவா் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.