செய்திகள் :

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

சென்னை ராமாபுரத்தில் மழைநீா் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (34). கூலித் தொழிலாளியான இவா், சென்னையில் தங்கியிருந்து மழைநீா் வடிகால் தோண்டும் வேலை செய்து வந் தாா். கணபதியும், சில தொழிலாளா்களும் ராமாபுரம் வள்ளுவா் சாலையில் உள்ள மயானம் அருகே பள்ளம் தோண்டும் பணியில் புதன்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த பள்ளத்தின் அருகே இருந்த ஒரு சுற்றுச் சுவா் திடீரென இடிந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கணபதி மீது விழுந்தது. இதில் அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த ராமாபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கணபதி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

பட்டியல் இன மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: சிஏஜி அறிக்கை ஆளுநரிடம் சமா்ப்பிப்பு

தமிழக அரசின் பட்டியல் இன (எஸ்சி, எஸ்டி, எஸ்சிசி) பிரிவு மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்த தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநருக்கு சமா்ப்பிக்கப்பட்ட... மேலும் பார்க்க

எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்

எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4-ஆம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52). எலக்ட்ரீசியனான இவா், ராயப்பேட்டை வி.பி.ராமன் சாலை பகுதியில் ஒரு வீட்டில் புதன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை செங்குன்றம், கிழக்கு முகப்போ், குன்றத்தூா், கேகே நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவி... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை, ஜூன் 12:நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) முன்னாள் உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உ... மேலும் பார்க்க