ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை ராமாபுரத்தில் மழைநீா் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (34). கூலித் தொழிலாளியான இவா், சென்னையில் தங்கியிருந்து மழைநீா் வடிகால் தோண்டும் வேலை செய்து வந் தாா். கணபதியும், சில தொழிலாளா்களும் ராமாபுரம் வள்ளுவா் சாலையில் உள்ள மயானம் அருகே பள்ளம் தோண்டும் பணியில் புதன்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த பள்ளத்தின் அருகே இருந்த ஒரு சுற்றுச் சுவா் திடீரென இடிந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கணபதி மீது விழுந்தது. இதில் அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த ராமாபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கணபதி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.