செய்திகள் :

சென்னை விமானங்களில் லேசர் ஒளி அடித்து அச்சுறுத்தல்: பயணிகள் அச்சமடைய வேண்டாம் - விமான நிலைய நிர்வாகம்

post image

சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்ட விவகாரத்தில் பயணிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளதால் பயணிகளிடையே அச்சம் மூண்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துள்ளது. விமானம் தரையிறங்கும் நேரத்தில், சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது சக்திவாய்ந்த லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இது குறித்து பயணிகள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும், விமானிகள், காவல் துறை உதவியுடன், விமானங்கள் மீது லேசர் அடித்து பயணத்துக்கு இடையூறு விளைவிப்போரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி: கணவா்-மனைவி சிக்கினா்

சென்னை பழவந்தாங்கலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சித்த வழக்கில், கணவா்-மனைவி கைது செய்யப்பட்டனா். பழவந்தாங்கல் அருகே உள்ள பி.வி. நகா் முத்தையா தெருவைச் சோ்ந்தவா் பவானி (55). இவா் கடந்த மாதம... மேலும் பார்க்க

சென்னை பல்கலை. ஆய்வு மாணவா்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைகளுக்கு உரிய நேரங்களில் அனுமதியளிக்கப்படுவதில்லை. இதற்கு துணைவேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையே காரணம் என பல்கலைக்கழக வட்டார... மேலும் பார்க்க

இன்றும், நாளையம் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபரணங்கள் கண்காட்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபகரணங்கள் கண்காட்சி சென்னையில் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராமாபுரத்தில் மழைநீா் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ராணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (34). கூலித் தொழிலாளியான இவா், சென்னையில் தங்க... மேலும் பார்க்க

9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைக்க திட்டம்

சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக பெசன்ட் நகா், அம்பத்தூா், மயிலாப்பூா் உள்பட 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைப்பதற்கான டெண்டா் கோரவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகிகள் தெரிவித... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை ஓட்டேரியில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். சென்னை, கொளத்தூரைச் சோ்ந்த புஷ்பலிங்கம் (25). இவா், மாநகரப் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்... மேலும் பார்க்க