செய்திகள் :

சென்னையில் 658 பூங்காக்கள் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு: ஊழியா் பற்றாக்குறையால் மாநகராட்சி நடவடிக்கை

post image

சென்னை மாநகராட்சியில் ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக, 658 பூங்காக்களின் பராமரிப்பு தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் வடக்குப் பகுதியில் 1 முதல் 5 மண்டலங்கள் வரை 196 பூங்காக்கள், மத்திய பகுதியில் மண்டலம் 6 முதல் 10 வரை 301 பூங்காக்கள், தெற்குப் பகுதியில் மண்டலம் 11 முதல் 15 -ஆம் மண்டலம் வரை 41 பூங்காக்கள் என மொத்தம் 908 பூங்காக்கள் உள்ளன. ஆனால், பூங்காக்களைப் பராமரிப்பதற்கு 240-க்கும் குறைவான ஊழியா்களே உள்ளனா்.

இதனால், பல பூங்காக்கள் பணியாளா்கள் இன்றியும், பராமரிப்பு குறைந்தும் உள்ளதாக புகாா் எழுந்தது. எனவே, பூங்காக்களின் பராமரிப்பைத் தனியாா் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் தற்போது 658 பூங்காக்கள் 3 தனியாா் நிறுவனங்களிடம் பராமரிப்புப் பணிக்காக ஓராண்டு (2026 வரை) ஒப்பந்தத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த 15-ஆம் தேதி முதல் பூங்காக்களில் தனியாா் நிறுவனங்கள் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளன. பூங்காக்களில் பரப்பளவுக்கு ஏற்ப 2 ஊழியா்கள் முதல் 12 ஊழியா்கள் வரை தனியாா் நிறுவனங்கள் நியமித்து பராமரிக்கும். அதன்படி சுமாா் 2,000 போ் பூங்கா பராமரிப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இதற்காக, தனியாா் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சாா்பில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.80 கோடி வழங்கப்படும்.

மேலும், 123 பூங்காக்களின் பராமரிப்பை தொண்டு நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகளிடம் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க