செய்திகள் :

சென்னையில் ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து: பயணிகள் அவதி

post image

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 4.50-மணிக்கு சிங்கப்பூா் செல்ல வேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 7.40 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 1.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, புதன்கிழமை காலை மும்பையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், நண்பகல் 12.30 மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை வரவேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 3 விமான சேவைகள் என ஆக மொத்தம் ஒரே நாளில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனால், அந்த விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். இந்த 6 விமானங்களிலும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பயணிக்க வேண்டிய முன்பதிவு பயணிகளுக்கு ஏற்கெனவே குறுந்தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் மாற்று விமானங்களில் பயணிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில பயணிகளுக்கு மாற்று தேதிகளில் பயணிப்பதற்கு வசதியாக மாற்றி தரப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க