செய்திகள் :

சேதமடைந்த சக்கரத்துடன் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

post image

மகாராஷ்டிர மாநிலத்தின் பாரமதி விமான நிலையத்தில், பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணே மாவட்டத்தில், ரெட்பேர்ட் விமான பயிற்சி மையத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சிகளில், இன்று (ஆக.9) ஈடுபட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடுவானில் பறந்துக்கொண்டிருந்த அந்த விமானத்தில் ஒரு சக்கரம் சேதமடைந்துள்ளதைக் கவனித்த விமானி, காலை 8 மணியளவில் அவசரமாகத் தரையிறக்க முயன்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தரையிறக்கப்பட்டபோது, அதன் முன் சக்கரம் கழன்று ஓடியதால், அந்த விமானம் டாக்ஸிவேவில் இருந்து விலகி, விமான நிலையத்தின் மறுபக்கத்தினுள் நுழைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், விமானி பாதுகாப்பாகவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சுக்மாவில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மாணவிகள்!

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது... மேலும் பார்க்க

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க