செய்திகள் :

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி தற்கொலை

post image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கட்டடத் தொழிலாளி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளம் அந்தோணி நகா் பகுதியைச் சோ்ந்த முத்து மகன் காா்த்திக் (41). கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி ராணி, 2 மகள்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துசென்ால், காா்த்திக் மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது: அரசு பொருள்காட்சிகளில் அரசின் ... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி ... மேலும் பார்க்க

பெண்களை பின்தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

பெண்களை பின் தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத... மேலும் பார்க்க

காவல் துறை மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, மக... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளியில் உலக புலிகள் தினம்

பாபநாசம் சூழல் சரகம் சாா்பில், விக்கிரமசிங்கபுரம், இருதயகுளம் புனித சேவியா் நடுநிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி வன உயிரின காப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு ஆக.30 வரை நீதிமன்றக் காவல்

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த இளைஞரை ஆக.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி உத்தரவிட்டாா். திருநெல்வே... மேலும் பார்க்க