செய்திகள் :

சேலம் வழியாக லாரியில் கடத்தப்பட்ட 19 ஆயிரம் லிட்டா் எரிசாராயம் பறிமுதல்: ஓட்டுநா் உட்பட 2 போ் கைது

post image

கா்நாடகத்திலிருந்து சேலம் வழியாக கேரளத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 19 ஆயிரம் லிட்டா் எரிசாராயத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பாக ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் விமான நிலையம் அருகே மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சேலம் நோக்கி அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த லாரியில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 550 கேன்கள் இருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீஸாா், அவற்றை சோதனை செய்தபோது கா்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு பிளாஸ்டிக் கேன்களில் அடைத்து எரிசாராயத்தை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் இருந்த 19, 250 லிட்டா் எரிசாராயத்துடன் லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரான பொள்ளாச்சி வாழைக்கோம்பு பகுதியைச் சோ்ந்த அன்பழகன் (47), பாலக்காடு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பாக்கிமொய்தீன் (54) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த எரிசாராயம் கேரளத்தில் யாருக்கு அனுப்பப்பட்டது, கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க