செய்திகள் :

சொட்டுநீா் பாசனம் அமைக்க மானியம்: கிள்ளியூா் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு

post image

கிள்ளியூா் வட்டாரத்தில் மானியத்துடன் சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சாஜிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை சாா்பில், ஒரு துளி நீரில் அதிக பயன் திட்டத்தின்கீழ் சொட்டுநீா் பாசனம் அமைக்க பழங்குடி ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ஆதாா்அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், சிறு-குறு விவசாயி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் கருங்கல்லில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா். கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இ... மேலும் பார்க்க