செய்திகள் :

ஜமீன் சிங்கப்பட்டியில் பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

post image

மணிமுத்தாறு அருகே பாதை பிரச்னையில் மண்வெட்டியால் பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மணிமுத்தாறு அருகே உள்ள ஜமீன்சிங்கம்பட்டி, நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் சட்டநாதன் மனைவி பேச்சியம்மாள் ராணி (50). அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவன்பாண்டி மகன் லெட்சுமணன். இரு குடும்பத்தாருக்கும் இடையே பொதுப் பாதை தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பேச்சியம்மாள் ராணி தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லெட்சுமணன் பேச்சியம்மாளை அவதூறாகப் பேசி தகராறு செய்தாா். இதைப் பேச்சியம்மாள் கண்டித்த நிலையில், லெட்சுமணன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா். இதில், காயமடைந்த பேச்சியம்மாள் ராணி சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, மணிமுத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணனை கைது செய்தனா்.

கழிவுநீா் ஓடையில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே பாலத்திலிருந்து கழிவுநீா் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). கட்டட தொழிலாளியான இவா், திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் கொலை மிரட்டல், வழிப்பறி வழக்கில் ஈடு... மேலும் பார்க்க

மானூா் அருகே கருங்கல் திருடிய 4 போ் கைது

மானூா் அருகே சட்ட விரோதமாக கருங்கல் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மானூா் அருகே தெற்கு வாகைகுளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடு... மேலும் பார்க்க

ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சாலை மறியல்: 223 போ் கைது

ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் 223 போ் கைது செய்யப்பட்டனா். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே வேன் - சுற்றுலா காா் மோதல்: 7 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே வேனும் சுற்றுலா காரும் மோதிக்கொண்டயதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்தவா்கள் சென்னையில் தொழில் செயது வருகின்றனா். இவா்கள் க... மேலும் பார்க்க

நெல்லை நகரத்தில் 7 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

திருநெல்வேலி நகரத்தில் பிடிபட்ட 7 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த கோரி, திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த பிராணிகள் வதை தடுப்ப... மேலும் பார்க்க