அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
ஜெய்சங்கர்: "ஒசாமா ஏன் பாகிஸ்தானை பாதுகாப்பானதாக கருதினார்?" - மேற்கு நாடுகளுக்கு நச் கேள்வி!
பிரஸ்ஸல்ஸில் இருந்து ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்துவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த பிரச்னையை, அண்டை நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னையாக அல்லாமல், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை அல்ல'
மேற்குலக மீடியாக்கள் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இரு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான போட்டியாக காட்சிப்படுத்தியதாக விமர்சித்துள்ளார் ஜெய்சங்கர்.
"நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் என்று ஒரு நபர் இருந்தார். அவரும் அவர் சார்ந்தவர்களும் வெஸ்ட் பாயிண்டிற்கு அடுத்துள்ள ஒரு பாகிஸ்தான் இராணுவ நகரத்தில் பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தது ஏன்?... இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும் - இது வெறும் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை அல்ல. தீவிரவாதத்தைப் பற்றியது. இந்த தீவிரவாதம் மீண்டும் உங்களையும் துரத்தி வரக்கூடும்" எனப் பேசியுள்ளார் ஜெய்சங்கர்.
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து...
ஜெய்சங்கரிடம், ரஷ்யா, உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவரும் சூழலில், மேற்கு நடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "இந்தியா போர்களத்தில் இருந்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை... அந்த தீர்வை பரிந்துரைப்பவர்களாகவோ அல்லது தீர்ப்பளிப்பவர்களாகவோ நாங்கள் இல்லை... ஆனால் நாங்கள் அதில் சம்பந்தப்படாதவர்களாகவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்." எனப் பேசியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்தபோது மேற்கு நாடுகள் பாகிஸ்தான் பக்கம் நின்றதையும் சுட்டிக்காட்டினார்.
"ஒவ்வொரு நாடும், இயற்கையாகவே, அதன் சொந்த அனுபவம், வரலாறு மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்கிறது. இந்தியாவுக்கு ஒரு நீண்டகால குறை இருக்கிறது. நாங்கள் சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது. அப்போது அவர்களுக்கு ஆதரவளித்தது யார்? மேற்குலக நாடுகள்." என சுட்டிக்காட்டினார் ஜெய்சங்கர்.
"அப்போது மழுப்பலாகவோ மௌனமாகவோ இருந்துவிட்டு, இப்போது 'சர்வதேச கொள்கைகள் பற்றி ஒரு சிறந்த உரையாடலை நடத்துவோம்' எனக் கூறினால், அவர்களின் சொந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கச் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.