செய்திகள் :

ஜெய்சங்கர்: "ஒசாமா ஏன் பாகிஸ்தானை பாதுகாப்பானதாக கருதினார்?" - மேற்கு நாடுகளுக்கு நச் கேள்வி!

post image

பிரஸ்ஸல்ஸில் இருந்து ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்துவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த பிரச்னையை, அண்டை நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னையாக அல்லாமல், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை அல்ல'

மேற்குலக மீடியாக்கள் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இரு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான போட்டியாக காட்சிப்படுத்தியதாக விமர்சித்துள்ளார் ஜெய்சங்கர்.

Jaishankar
Jaishankar

"நான் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் என்று ஒரு நபர் இருந்தார். அவரும் அவர் சார்ந்தவர்களும் வெஸ்ட் பாயிண்டிற்கு அடுத்துள்ள ஒரு பாகிஸ்தான் இராணுவ நகரத்தில் பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தது ஏன்?... இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும் - இது வெறும் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை அல்ல. தீவிரவாதத்தைப் பற்றியது. இந்த தீவிரவாதம் மீண்டும் உங்களையும் துரத்தி வரக்கூடும்" எனப் பேசியுள்ளார் ஜெய்சங்கர்.

ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து...

ஜெய்சங்கரிடம், ரஷ்யா, உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவரும் சூழலில், மேற்கு நடுகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் விதிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

Jaishankar
Jaishankar

அதற்கு அவர், "இந்தியா போர்களத்தில் இருந்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை... அந்த தீர்வை பரிந்துரைப்பவர்களாகவோ அல்லது தீர்ப்பளிப்பவர்களாகவோ நாங்கள் இல்லை... ஆனால் நாங்கள் அதில் சம்பந்தப்படாதவர்களாகவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்." எனப் பேசியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்தபோது மேற்கு நாடுகள் பாகிஸ்தான் பக்கம் நின்றதையும் சுட்டிக்காட்டினார்.

"ஒவ்வொரு நாடும், இயற்கையாகவே, அதன் சொந்த அனுபவம், வரலாறு மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்கிறது. இந்தியாவுக்கு ஒரு நீண்டகால குறை இருக்கிறது. நாங்கள் சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது. அப்போது அவர்களுக்கு ஆதரவளித்தது யார்? மேற்குலக நாடுகள்." என சுட்டிக்காட்டினார் ஜெய்சங்கர்.

"அப்போது மழுப்பலாகவோ மௌனமாகவோ இருந்துவிட்டு, இப்போது 'சர்வதேச கொள்கைகள் பற்றி ஒரு சிறந்த உரையாடலை நடத்துவோம்' எனக் கூறினால், அவர்களின் சொந்த வரலாற்றைத் திரும்பிப் பார்க்கச் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

Plane Crash : உலகை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025

* "அன்புமணி ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது" - ராமதாஸ் * பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பில் பாலு தொடர்வார் * கட்சியினரை அவமதிக்கும் அன்புமணி.. வைரல் ... மேலும் பார்க்க

'கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை; பாஜக ஆட்சிதான் என் விருப்பம்.. ஆனாலும்...' - அண்ணாமலை ஓப்பன் டாக்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் கடந்த 11 ஆண்டுகளில் 2 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுக்கப்... மேலும் பார்க்க

'எலானுக்கு மன்னிப்பு உண்டு' - சமாதான கொடியை பறக்கவிடும் ட்ரம்ப், எலான் மஸ்க்; பின்னணியில் என்ன?

00"கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் குறித்து நான் போட்ட பதிவுகளுக்கு வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன' - இது நேற்று எலான் மஸ்க் போட்ட பதிவு. 'என்னதிது...?' என்று இந்தப் போஸ்ட் பெரும் ஆச்சரியத்த... மேலும் பார்க்க

"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர் கேள்வி!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நெற் களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள் என்றால்... மேலும் பார்க்க