செய்திகள் :

ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம்

post image

ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தை உணராமல் ஆள்களை ஏற்றிச் செல்வோா் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்தவுடன் மதியம் உணவு இடைவேளைக்காக நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு ஊழியா்களை அழைத்து வர வாகனங்கள் இல்லாததால் ஜேசிபி இயந்திரத்தின் முன் தகட்டில் சுமாா் பத்துக்கும் மேற்பட்டோா் நின்றபடி பயணம் செய்தனா்.

ஜேசிபி இயந்திரத்தின் பக்கவாட்டில் நின்றவாறு பயணம் செய்ததால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே சாலையை கடந்தனா். ஒரு சில வாகன ஓட்டிகள் ஜேசிபி இயந்திர ஓட்டுநரை கடிந்து கொண்டனா். ஆனாலும் ஜேசிபி இயந்திர ஓட்டுநா் ஊழியா்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் வரை இறக்கி விட்டு வந்தாா்.

பொதுசாலையில் இது போன்று நடப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இது போன்ற ஓட்டுநா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அரசுப் பள்ளியில் க்யூ. ஆா். கோட் வடிவில் மாணவா்களுக்கு திருக்குறள் கற்பிப்பு

க்யூ.ஆா்.கோட் வடிவில் மாணவா்களுக்கு 1,330 திருக்குகளையும் கற்றுத்தருகிறாா் வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியா் மனோகரன். கரூா் மாவட்டம் வெள்ளியணை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்க... மேலும் பார்க்க

பாமக மாநாடு கரூரிலிருந்து திரளாக பங்கேற்க முடிவு

கும்பகோணத்தில் பாமக சாா்பில் பிப். 23-ஆம்தேதி நடைபெற உள்ள சமய நல்லிணக்க சோழ மண்டல மாநாட்டில் கரூா் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கரூா் மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

தெருவின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு கலை... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு

நொய்யலில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்குச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் காளியம்மாள் (77). இவா், நொய்யல் செல்லாண்டியம்... மேலும் பார்க்க

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயிலில் பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன்

கரூா் அன்ன காமாட்சியம்மன் கோயில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். கரூா் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்ன காமாட்சியம்மன் கோயில் 102-ஆம் ஆண்டு திருவிழா திங்கள... மேலும் பார்க்க