செய்திகள் :

தனியாா் நிறுவன தொழிலாளா்கள் 8 ஆவது நாளாக போராட்டம்: எஸ்.ஐ. சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

post image

சேலம் புதுரோடு பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் நிறுவனம் மூடப்பட்டதைக் கண்டித்து, 8 ஆவது நாளாக தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளரை தொழிலாளா்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் புதுரோடு அருகே இயங்கிவந்த தனியாா் மின்னணு நிறுவனத்தில் 450க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் நிறுவனத்தை திறக்க வலியுறுத்தியும் கடந்த 1 ஆம் தேதி முதல் தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அங்கு வந்த உளவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளரை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனா்.

அப்போது, நீங்கள் அரசுக்கு சரியான அறிக்கை கொடுக்கவில்லை. இவ்வளவு நாள்கள் போராட்டம் நடைபெறுவதற்கு நீங்கள்தான் காரணம் எனக் கூறி முற்றுகையிட்டனா். இதனையறிந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த உளவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன் விடுவிக்கப்பட்டாா்.

இதனிடையே, தனியாா் மின்னணு தொழிற்சாலைக்கு சென்றபோது, தன்னை சிலா் தாக்கி விட்டதாக புகாா் செய்து, சேலம் அரசு மருத்துவமனையில் காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன் சோ்ந்துள்ளாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க