செய்திகள் :

தன்பாலின செயலி மூலம் பழக்கம்; உறவுக்கு அழைத்த இளைஞரை மிரட்டி கொள்ளையடித்த நண்பர்கள்.. என்ன நடந்தது?

post image

திருப்பூர் மாவட்டம் சங்கராபுரம் பாரதி நகரைச் சேர்ந்த 29 வயதான பிரசன்னா அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தன்பாலின உறவு தொடர்பான செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த பிரசன்னா, அதன் மூலம் ஆண் நண்பர்களிடம் பேசி வந்துள்ளார்.

அப்போது, அந்த செயலி மூலம் பிரசன்னா தனக்கு பழக்கமான ஒருவரை உறவுக்கு அழைத்துள்ளார். அந்த நபர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய பிரசன்னா அந்த செயலியில் பேசியவர் கூறிய காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து அந்த இளைஞரிடம் பிரசன்னா பேச்சுக் கொடுத்துள்ளார்.

அப்போது, அந்தக் காட்டுப் பகுதியின் முட்புதருக்குள் மறைந்திருந்த மற்றொருவர், பிரசன்னா கழுத்தில் திடீரென கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கசங்கிலி ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

கைது
கைது

இதுகுறித்து பிரசன்னா நல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரசன்னாவை ஏமாற்றி பணம் பறித்துச் சென்ற திருப்பூர் செரங்காடு பகுதியைச் சேர்ந்த அபிநிவாஸ் (21), மனோஜ்குமார் (21)ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில், தன்பாலின உறவுக்காக அழைத்து பிரசன்னாவின் நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

செல்போன் செயலி மூலம் தன்பாலின உறவுக்கு அழைத்த இளைஞரிடம் பணம், நகை பறித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க