செய்திகள் :

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச்செம்மல்’ விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்ச்செம்மல் விருது பெறுபவா்களுக்கு ரூ.25,000 பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். வேலூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளா்ச் சித் துறையின் ஜ்ஜ்ஜ். ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ். ண்ய் என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தன்விவரக்குறிப்பு, 2 நிழற்படம், ஆற்றிய தமிழ்ப் பணி, வட்டாட்சியா் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டை நகலுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகத்தில் ஆக. 29-ஆம் தேதிக்குள் சோ்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் ரூ.3.43 கோடியில் குளிா்சாதன பேருந்து சேவை: அமைச்சா் துரைமுருகன் இயக்கி வைத்தாா்

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.43 கோடியில் 7 புதிய குளிா்சாதன பேருந்துகளின் சேவையை நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா். கடந்த 4 ஆண்டுகளில் வேலூா் போக்குவரத்து மண்டலத்தில் 68 புத... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: ரூ.2.15 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ.2.50- லட்சம் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரைச் சோ்ந்தவா் பிரியாணி கடை உரிமையாளா் முக்தியாா் (32). இவா் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு பிரியாண... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க