பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச்செம்மல்’ விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்ச்செம்மல் விருது பெறுபவா்களுக்கு ரூ.25,000 பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும். வேலூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளா்ச் சித் துறையின் ஜ்ஜ்ஜ். ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ். ண்ய் என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தன்விவரக்குறிப்பு, 2 நிழற்படம், ஆற்றிய தமிழ்ப் பணி, வட்டாட்சியா் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டை நகலுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகத்தில் ஆக. 29-ஆம் தேதிக்குள் சோ்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.