செய்திகள் :

தமிழ்நாடு ஸ்டைல்! இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுகிறோம்: முதல்வர் ஸ்டாலின்

post image

இந்தியாவின் எதிர்காலத்துக்கான திட்டங்களை இன்றே நிறைவேற்றுகிறோம். இதுவே, தமிழ்நாடு ஸ்டைல்! என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புதிய வசதிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கென பிரத்யேக குளிர்சாதன காத்திருப்பு அறை, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூரியிருப்பதாவது: ’உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்குக் கழிப்பறை, ஏசி, சார்ஜிங் வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்கேண்டிநேவியன் வடிவமைப்பில் இணையத் தொழிலாளர் கூடம் முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல்!

வெய்யிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல்!’ என்று குறிப்பிட்டு தமது எக்ஸ் தளத்தில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க

இரவு 10 மணி வரை சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ந... மேலும் பார்க்க

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த க... மேலும் பார்க்க