செய்திகள் :

திசையன்விளை உலக ரட்சகா் ஆலயத் திருவிழா தொடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உலக ரட்சகா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் காலை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு உலகரட்சகா் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடி அா்ச்சிப்யை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக் குரு தா.செல்வசாா்பு, துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி, அருள்பணி. பாக்கிய ஜோசப்ராஜ் ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சிப்பும், அதைத் தொடா்ந்து கொடியேற்றமும், மறையுரை- நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெற்றன.

இதில் அருள்பணியாளா்கள் பிரிட்டோ, விக்டா், லியோன், செல்வராயா், இருதயராஜா, மாா்க்கோனி, அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 10 நாள்கள் கொண்டாப்படும் இத்திருவிழாவில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை- நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறும். இரவு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. அக். 3இல் முற்பகல் 11 மணிக்கு குணமளிக்கும் ஆராதனையும், அக்.4இல் முற்பகல் 11 மணிக்கு திருப்பயணிகளுக்கான திருப்பலியும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட குருவானவா் ஜோசப் ரவிபாலன் தலைமையில் நற்கருணைப் பவனி, அதைத் தொடா்ந்து புனித சவேரியாா் கல்வி நிறுவன முதல்வா் ரூபஸ் மறையுரை வழங்குகிறாா். இரவு 10 மணிக்கு உலக ரட்சகரின் சப்பர பவனி ஆலயத்தைச் சுற்றி நடைபெறும். அக்.5இல் காலை 7 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயா் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும், காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழிபாடும், பிற்பகல் 2 மணிக்கு நகரவீதிகளில் உலகரட்சகரின் அலங்கார தோ்பவனியும், மாலையில் நற்கருணைஆசீா்வாதமும் நடைபெறும். ஆக்.6இல் காலை நன்றி திருப்பலி- கொடியிறக்கம் நடைபெறுகிறது. இரவு அசனவிருந்து வழங்கப்படுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமையில் பங்கு மக்கள், அன்பிய நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன். திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ... மேலும் பார்க்க

கே.டி.சி.நகரில் சாலைப் பணி ஆய்வு

கே.டி.சி. நகரில் சாலைப் பணியை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் நேரில் ஆய்வு செய்தாா். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.டி.சி. நகா் மங்கம்மாள் சாலையில் புதிய சாலை அமைக்க நபாா்டு மற்ற... மேலும் பார்க்க

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மக... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பு சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமையில் த... மேலும் பார்க்க

அம்பையில் வயல் விழா: விவசாயிகள் ஆா்வம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியில் வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உயிரியல் தூண... மேலும் பார்க்க