செய்திகள் :

திருச்செங்கோடு அருகே பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு; மகள் காயம்

post image

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த அவா்களது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருச்செங்கோடு செம்மாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (46). இவரது மனைவி ராஜலட்சுமி (42). இவா்களுக்கு ராஜேஸ்வரி (24), வசந்தபிரியா(19) என்ற மகள்களும், ஹரிபிரசாத் (17) என்ற மகனும் உள்ளனா். இதில் மூத்த மகள் ராஜேஸ்வரி திருமணமாகி வட்டூரில் வசித்து வருகிறாா்.

மகளின் மருத்துவப் பரிசோதனைக்காக சண்முகம் தனது மனைவி, மகள் ராஜேஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு சென்றாா்.

வட்டூா் அருகே திருச்செங்கோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது ஒரு பேருந்து சண்முகம் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கிவீசப்பட்டனா். அக்கம்பக்கத்தினா் அவா்கள் மூவரையும் மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இவா்களில் ராஜலட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தலையில் பலத்த காயமடைந்த சண்முகம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். ராஜேஸ்வரி கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து மல்லசமுத்திரம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க