செய்திகள் :

திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்களில் தீ: 5 ஆயிரம் வாழை மரங்கள் நாசம்

post image

திருச்செந்தூா் அருகே வாழைத் தோட்டங்கள் தீப்பற்றி எரிந்ததில் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் வாழை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

திருச்செந்தூா் அருகே காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கரைவிளையில் விவசாய நிலங்களில் மின்கசிவு காரணமாக வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த 3 வாழைத் தோட்டங்களுக்கும் பரவியது.

திருச்செந்தூா் அருகே காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கரைவிளையில் வாழைத் தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரா்கள்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலும், சாத்தான்குளம் நிலைய அலுவலா் ஹாரிஸ் தலைமையிலும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து வாழைத் தோட்டங்களில் பரவிய தீயை சுமாா் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். இருப்பினும் இரு தோட்டங்களில் ரூ.6 லட்சம் மதிப்பிலான குலை தள்ளிவாழைகள் தீயில் கருகின.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க