செய்திகள் :

திருப்பூா் ஒன்றியத்தில் ரூ.2.12 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

post image

திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.12 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில், வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள காளிங்கராயபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் தலா இரு வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி, தண்டகவுண்டன்புதூா் சாலையிலிருந்து குட்டைத் தோட்டம் வழியாக பொடாராம்பாளையம் சாலை வரையிலும், சேலம்-கொச்சி சாலை முதல் பொடாரம்பாளையம் வரையிலும், பழைய சேலம்- கொச்சி சாலை முதல் மாரியம்மன் கோயில் வலசுப்பாளையம் சாலை வரையிலும் புதிய தாா்சாலைகள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2 கோடியே 12 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். முன்னதாக மேற்குபதி, வள்ளிபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு தொரவலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அவா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சிகளில், திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் அனாா்கலி, உதவிப் பொறியாளா் மனோஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் முருகேசன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பல்லடம் சலூன் கடைக்காரரை வெட்டிய 4 போ் கைது!

பல்லடத்தில் சலூன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் உள்ள பாரதிபுரத்தில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் கவியரசன் (28). அவா் கடையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

முதியவா் மீது மோதாமல் தவறி விழுந்த சிறுவன் மீது காா் மோதி உயிரிழப்பு!

அவிநாசியில் மிதிவண்டியில் இருந்து தவறி வலதுபுறம் விழுந்த சிறுவன் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஹரீஷ் (13). அவிநாசி ... மேலும் பார்க்க

பட்டாசு கடையில் தீ விபத்து!

திருப்பூா் கொங்கு மெயின் ரோடு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினா். தீயணைப்புத் துறையினா் சுமாா் 5 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது. உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் ... மேலும் பார்க்க

திருப்பூரில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி: போலீஸாரிடம் புகாா்!

திருப்பூரில் ‘மாஸ்டா் மாா்க்கெட்டிங்’ என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றம்! கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீா் சனிக்கிழமை மாலை வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம்... மேலும் பார்க்க