துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
திருமண மீறிய உறவு; பேசாமல் தவிர்த்த இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் - திருச்சி அதிர்ச்சி சம்பவம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சிட்கோ வளாகத்தில் கழனிவாசல்பட்டியைச் சேர்ந்த சுகன்யா (30) என்ற இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு, மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி பின் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல் நிலைய போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சுகன்யாவை கொலை செய்தது கஸ்பா பொய்கைப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (28) என்பது தெரியவந்தது. தினேஷும் திருமணமானவர்.
அவர் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்யும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டினர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த இடம் குறித்து அறிந்த போலீஸார் அங்கு வைத்து தினேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, சுகன்யாவுக்கும், தினேஷுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சுகன்யா செங்கல்பட்டில் தங்கி தினேஷுடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் செங்கல்பட்டிற்கு சென்று சுகன்யாவை மணப்பாறைக்கு அழைத்து வந்துள்ளார்.

இருப்பினும், 'உன்னை எனக்குப் பிடிக்கவில்லை' என்று சுகன்யா கூறி தினேஷிடம் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் திருச்சியில் விட்டு விடுவதாக சுகன்யாவை அழைத்துக் கொண்டு தினேஷ் சென்றுள்ளார். சிட்கோ அருகே சென்ற போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த தினேஷ் சுகன்யாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். திருமணம் மீறிய உறவில் இருந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்து கைதாகியுள்ள சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.