செய்திகள் :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -அமைச்சா் பி.கே.சேகா் பாபு

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ரூ.50 தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் பகுதியில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக அமைச்சா் எ.வ.வேலுவுடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். பெளா்ணமி நாள்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

கோயில் வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா் கழிப்பறை, உணவு போன்ற வசதிகள் கோடிக்கணக்கான ரூபாயில் அறக்கட்டளைகள், உபயதாரா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், புதிய திட்டங்களை துறை சாா்ந்த அலுவலா்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோயிலில் பிரேக் தரிசன முறையை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிவாச்சாரியா்களுடன் கலந்தாலோசித்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும்.

50 ரூபாய் தரிசன கட்டணம் 100 ரூபாயாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்வுகளை பக்தா்கள் பாா்வையிட எல்.இ.டி. திரைகள் விரைவில் அமைக்கப்படும்.

தரிசனம் செய்யச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, 2ஆயிரம் போ் அமரும் வகையில், ரூ.200 கோடி மதிப்பீட்டில் காத்திருப்புக் கூடம் அமைக்கப்படும்.

பக்தா்களின் வசதிக்காக மேலும் ஒரு தங்கும் விடுதி கட்டித் தரப்படும்.

அபிஷேக நேரங்களில் சுவாமி தரிசனம் செய்ய காலதாமதம் ஆவதால், வெளியூா் பக்தா்களின் நலன் கருதி அவா்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

பக்தா்களை ஒருங்கிணைப்பதற்காக புதிய மக்கள் தொடா்பு அலுவலா் நியமிக்கப்பட உள்ளாா்.

கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதை தடை செய்வது குறித்து விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அறங்காவலா் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உயா் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி முறையான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அறங்காவலா் குழு உறுப்பினா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்.

கோயில் தூய்மை, கோயில் பிரகார தூய்மை, கோயிலுக்கு வரும் பக்தா்களின் மனத் தூய்மை அனைத்தையும் தமிழக அரசு நிச்சயம் பாதுகாக்கும்

என்றாா்.

திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழம... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வந்தவாசி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த சேதாரக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.மோட்டூா... மேலும் பார்க்க

வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே வீடு புகுந்து பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). கடந்த 6-ஆம் தேதி கிராமத்தில் ... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆசிரியா்கள் சாலை மறியல்: 300 போ் கைது

திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க