செய்திகள் :

திருவாடானை,தொண்டி பகுதிகளில் இன்று மின்தடை

post image

திருவாடானை, தொண்டி பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து ராமநாதபுரம் செயற்பொறியாளா் திலகவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாடானை, நகரிகாத்தான், தொண்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் திருவாடானை, நகரிகாத்தான் மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா் பதனக்குடி கிராமப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

இதே போல, தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொண்டி நகா்ப் பகுதிகள், நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், தளிா் மருங்கூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி, எஸ்.பி.பட்டினம், எம்.வி.பட்டினம், வி.எஸ்.மடம், குளத்தூா், மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை கண்மாய்ப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலித் தொடா் போல கண்மாய... மேலும் பார்க்க

பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ மூலம் மானியம் பெற மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் இரா. வெண்ணிலா தெரிவித்தா... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழை

ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாஸ்கரன், மதுரை மது... மேலும் பார்க்க